குற்றால அருவியில் குளித்த கல்யாண பொண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி -அரை மணி நேரத்தில் நடந்த அதிசயம்

Update: 2024-07-05 04:57 GMT

தென்காசி மாவட்டம் குற்றால புலி அருவியில் குடும்பத்துடன் குளிக்க வந்த சுற்றுலாப் பயணிகளில் பெண் ஒருவர், தனது கையில் அணிந்திருந்த சுமார் ஒரு பவன் தங்க மோதிரத்தை தவறவிட்டார். தொலைத்தது திருமண மோதிரம் என்பதால்

செய்வதறியாது தவித்த அந்த பெண் குற்றாலம் பேரூராட்சி தலைவர் கணேஷ் தாமோதரனிடம் முறையிட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அவர் பேரூராட்சி பணியாளர்களை அனுப்பி புலியருவி பகுதியில் உள்ள சிறிய தடாகத்தில் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட வைத்தார்.

அவர்களுடன் போலீசாரும் இணைந்து, சுமார் அரை மணி நேர தேடுதலுக்குப்பின், மோதிரத்தை கண்டுபிடித்து தொலைத்த பெண்ணிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்