``மெரினாவில் 5 பேர் பலி.." - அண்ணாமலைக்கு வந்த கடுங்கோபம்.. போட்ட பரபரப்பு ட்வீட்

Update: 2024-10-07 04:21 GMT

சென்னை மெரினா கடற்கரையில், விமான சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் இறந்ததற்கு, திமுக அரசின் அக்கறையின்மையே காரணம் என, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளையும், போதுமான போக்குவரத்து ஏற்பாடுகளையும் திமுக அரசு செய்யவில்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்காமல் திமுக அரசு நிர்வாகம் தோல்வி அடைந்து விட்டதாகவும், பொதுமக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும் அண்ணாமலை சாடியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்