ஒரு உயிரை எதிர்பார்த்து தவம் கிடந்த மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட்.. கடைசியில் பெருஞ்சோகம்

Update: 2024-08-08 08:26 GMT

மதுரை பேருந்து நிலையத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு திடீர் பிரசவம் ஆன நிலையில், ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பிரவீனா என்ற கர்ப்பிணி பெண், உறவினரை பார்ப்பதற்காக மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்குள்ள 4-வது நடைமேடையில் ஓய்வெடுத்த அவர், திடீரென உடல் சோர்வடைந்து மயக்கம் அடைந்துள்ளார். அப்போது வயிற்றில் உள்ள தண்ணீர் குடம் உடைந்து அங்கேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது. கீழே விழுந்ததால் பச்சிளம் குழந்தைக்கு படுகாயம் ஏற்பட்ட நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து சிகிச்சை பலனின்றி பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்