தாலி கட்டும்போது மாப்பிள்ளைக்கு நேர்ந்த விபரீதம்.. மதுரையில் அதிர்ச்சி

Update: 2024-09-09 05:09 GMT

மதுரையில் திருமணத்தின் போது ஏற்பட்ட தீ விபத்தில் மணமகன் படுகாயமடைந்தார். எஸ்.எஸ். காலனி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அமெரிக்க வாழ் இந்தியரான சுப்ரமணியன் என்பவரது திருமண விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக வேள்வியில் இருந்த நெருப்பு, மணமகனின் உடையில் பற்றிக் கொண்டதில் அவர் படுகாயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், மருத்துவமனையில் அவரது திருமணம் நடைபெற்றதாகவும், அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்