மதுரையை துவம்சம் செய்த கனமழை..குளம்போல் காட்சி தரும் குடியிருப்பு - அதிர்ச்சி காட்சி

Update: 2024-10-14 08:05 GMT
  • மதுரை மாநகரின் பிரதான பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் குடியிருப்பு பகுதி குளம்போல் காட்சி அளிக்கிறது. பலத்த மழை காரணமாக சாத்தையார் ஓடையிலிருந்து வண்டியூர் கண்மாய் செல்லும் நீர் வழிப் பாதையில் கசிவு ஏற்பட்டது. அந்த மழைநீர் மதுரை மாநகரின் பிரதான பகுதியான மாட்டுத்தாவணி எதிரேயுள்ள டி.எம் நகர் குடியிருப்பு பகுதியை சூழ்ந்துள்ளது. முழங்கால் அளவுக்கு தேங்கிய மழைநீரால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ள டி.எம்.நகர் குடியிருப்பு மக்கள், சாத்தையார் ஓடையை ஒட்டி தடுப்பு சுவர் அமைக்க வலியுறுத்தியுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்