லாரி மோதியதில் ஏற்பட்ட தீயால்.. கருகி பலியான ஓட்டுநர்கள்.. திருப்பதியில் அதிர்ச்சி சம்பவம்

Update: 2024-09-26 12:37 GMT

திருப்பதி அருகே பழுதாகி நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதியதால் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

திருப்பதி அருகே உள்ள பூத்தலப்பட்டியில் இருந்து குப்பம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி முகிலி மலை பாதையில் பழுதாகி நின்றுள்ளது. இதனால் லாரியின் ஓட்டுனர் அதன் அடியில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது அதிவேகமாக வந்த மற்றொரு லாரி பழுதாகி நின்ற லாரி மீது மோதியதில் டீசல் டேங்குகள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் 2 லாரிகளின் ஓட்டுனர்களும் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்