"ஆளுநரை குற்றம் சாட்டுவது நியாயமில்லை" - பிரேமலதா ஆவேசம்

Update: 2024-10-21 06:35 GMT

"ஆளுநரை குற்றம் சாட்டுவது நியாயமில்லை" - பிரேமலதா ஆவேசம்

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினத்தில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் முப்பெரும் விழா நடைபெற்றது. கட்சி 20வது ஆண்டு நிறைவு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்குதல் விழா மற்றும் பத்மபூஷன் விருது பெற்ற விஜயகாந்த்-க்கு பாராட்டு விழா என முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.விழாவில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்னையில், ஆளுநரை குற்றம் சாட்டுவது நியாயமற்றது என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்