ஓட்டும் போது தெறித்து சிதறிய கண்ணாடி.. - அசால்ட்டாக டிரைவர் செய்த செயல்.. பரபரப்பு சிசிடிவி

Update: 2024-10-10 02:44 GMT

கோவையில் காற்று அதிகமாக வீசியதால் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்த போதிலும், பயணிகளை பத்திரமாக காப்பாற்றிய ஓட்டுனருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. திருப்பூரில் இருந்து கோவை நோக்கி வந்த தனியார் பேருந்து, தென்னம்பாளையம் அருகே வந்தபோது காற்று அதிகமாக வீசியதால் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கி விழுந்தது. அதில், பேருந்து ஓட்டுநர் சுரேந்திரனின் தலை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டபோதிலும், அதை அவர் பொருள்படுத்தால் பேருந்தை லாவகமாக நிறுத்தி, பயணிகளின் உயிரைக் காப்பாற்றினார். இந்த விபத்து குறித்து சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி, ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்