கோவையில் வழக்கறிஞர் கொடூர கொலை.. வெளியே வந்த முக்கிய தடயம்? - தீவிர வேட்டையில் போலீஸ்

Update: 2024-08-03 01:56 GMT

கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த உதயகுமார். வழக்கறிஞரான இவர், பொள்ளாச்சி செல்வதற்காக தனது காரில் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். ஆனால், மைலேரிபாளையம் பகுதியில் கோழிப்பண்ணை அருகே உதயகுமார் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது கழுத்து மற்றும் மார்பில் பல காயங்கள் இருந்தன. உடலை கைப்பறி பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், காரில் வந்த உதயகுமாரை, அடையாளம் தெரியாத நபர்கள், வெட்டிக் கொலை செய்துவிட்டு, அவரது காரை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றது தெரிய வந்துள்ளது. சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயண‌ன், 6 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளதால், கொலையாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்