படத்தை பார்த்து பக்கா பிளான்.. 24 மணி நேரத்தில் வேட்டை.. கைக்கு வந்ததும்..! கதறும் களவாணிகள்

Update: 2024-09-14 11:51 GMT

சதுரங்க வேட்டை பாணியில் நகைக்கடை அதிபரிடம் த‌ங்க‌க் கட்டிகளை கொள்ளையடித்த கும்பலை, 24 மணி நேரத்தில் போலீசார் பிடித்துள்ளனர்.

பட்டுக்கோட்டையை சேர்ந்த ஹரிசங்கர் என்ற நகை வணிகரிடம் சந்திரசேகர் என்பவர் பழக்கமாகி, தங்க‌க் கட்டிகள் வாங்க இருப்பதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதையடுத்து ஒரு கிலோ தங்க‌க் கட்டிகளுடன் சூலூரில் உள்ள பாப்பம்பட்டி பிரிவுக்கு சென்ற ஹரிசங்கரிடம், தனது மேனேஜர் ராஜ்குமாரை அனுப்புவதாக சந்திரசேகர் தெரிவித்துள்ளார். அதன்படி தங்க‌க் கட்டிகளை வாங்கிக் கொண்ட ராஜ்குமார், கார் பழுதாகிவிட்டதாகவும், அதனை சரி செய்துவிட்டு பின்னால் வருவதாக கூறி, ஹரிசங்கரை இறக்கிவிட்டுள்ளார். ஆனால், ராஜ்குமாரின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்த‌தால், ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஹரிசங்கர், போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து சிசிடிவி காட்சி அடிப்படையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், 24 மணி நேரத்தில் இளம் சிறார் உட்பட 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தங்க‌க் கட்டிகளையும், காரையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்