குடி போதையில் கணவன் தகராறு..!மனைவி எடுத்த அதிரடி முடிவு.. மாமனாரை குத்தி கிழித்த மருமகன்..

Update: 2024-10-12 13:58 GMT
  • குளித்தலை அருகே கருங்களாப்பள்ளியை சேர்ந்த ஞானகுரு, தனது மகள் தவமணியை, அதே ஊரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். ராஜேந்திரன் அடிக்கடி மது அருந்திவிட்டு தகராறு செய்ததால் மனவேதனை அடைந்த தவமணி, கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கணவனைப் பிரிந்து, தந்தை வீட்டிற்கு அருகே குடியிருந்து வருகிறார். இந்நிலையில், மதுபோதையில் ஞானகுரு வீட்டிற்கு வந்த ராஜேந்திரன், தனது மனைவியை வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறு கூறி தகராறு செய்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஞானகுருவை சரமாரியாக குத்தியுள்ளார். இதையடுத்து, ஞானகுருவை அருகில் இருந்தவர்கள் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அவர் உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக பிரேத கிடங்கில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ராஜேந்திரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்