சொத்த பல்லை எடுக்க சென்ற பெண்..குமரி டாக்டர் செய்த பகீர் காரியம்..வீட்டிற்கு சென்றவுடன் வந்த மயக்கம்

Update: 2024-06-29 13:44 GMT

கன்னியாகுமரி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சொத்தைப் பல்லை அகற்றச் சென்ற பெண்ணை பல் மருத்துவர் கன்னத்தில் அறைந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தக்கலை அருகே மணலியைச் சேர்ந்த அனிதா பத்மநாபபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்ற போது பல் அகற்ற மருத்துவர் அனிதாவிற்கு வாயில் ஊசி போட்ட நிலையில், அனிதா வலி தாங்காமல் கத்தியுள்ளார்... இதனால் ஆத்திரமடைந்த மருத்துவர் அனிதாவின் கன்னத்தில் ஓங்கி அடித்ததாக கூறப்படுகிறது. கண்ணீர் மல்க வீட்டிற்கு வந்த அனிதா உடல்நலக் குறைவால் மயங்கிய நிலையில், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மருத்துவமனையில் இருந்தபடி அனிதா வீடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்