ஓப்பனிங் நாளிலேயே போராட்டம்.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

Update: 2024-10-07 12:15 GMT

கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில், மீன் மார்க்கெட் திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நகராட்சி நிர்வாகம் சார்பில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில், 16 கடைகள் அடங்கிய மீன் மார்க்கெட் கட்டிட கட்டுமான பணிகள் நிறைவடைந்து, இன்று திறக்கப்பட இருந்தது. இந்நிலையில், அப்பகுதியில் ஏற்கனவே கடும் போக்குவரத்து நெரிசல் இருந்து வருவதாகவும், குறுகலான இப்பகுதியில் மீன் மார்க்கெட் அமைக்க வேண்டாம் என்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து, அங்கு வந்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்