பயங்கரவாதிகள் தாக்குதல்... 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்... ஜம்மு-காஷ்மீரில் பதற்றம்

Update: 2024-08-11 12:53 GMT

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில், ராணுவ வீரர்கள் இருவர் வீரமரணமடைந்தனர். அனந்த்நாக்கில் உள்ள கோகர்நாக் பகுதியில், தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, ராணுவ வீரர்கள் அப்பகுதியை சுற்றிவளைத்தனர். இதையடுத்து நடந்த துப்பாக்கிச்சண்டையில் ராணுவ வீரர்கள் இருவர் வீரமரணமடைந்தனர். இச்சம்பவத்தில் பொதுமக்கள் இருவர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்