பெரும் போர் வெடிக்கும் சூழலில் அமெரிக்கா செய்த சம்பவத்தால் உலகம் பதற்றம்

Update: 2024-08-14 05:24 GMT

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றங்களுக்கு மத்தியில் இஸ்ரேலுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுத உதவிகளுக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது... 50க்கும் மேற்பட்ட எஃப்-15 போர் விமானங்கள், அதிநவீன ஏர்-டு ஏர் ஏவுகணைகள், வெடிமருந்துகள் ஆகியவை இந்த ஆயுத உதவியில் அடக்கம்... காசாவில் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் படைகளால் கொல்லப்பட்டுள்ள நிலையில் இஸ்ரேலுக்கான ஆதரவை நிறுத்துமாறு அமெரிக்க மக்கள், எம்.பிக்கள் பலர் வலியுறுத்தி வரும் நிலையில், இந்த புதிய ஆயுத உதவி அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்