``மாணவிகளிடம் அத்துமீறல் - உடனடி தண்டனை..'' நீதிமன்றம் அதிரடி | High Court

Update: 2024-09-01 15:14 GMT

கடந்த 2018ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் சிவஞானபுரம் அரசு பள்ளி மாணவியை விளையாட்டு போட்டிகளுக்கு அழைத்து சென்ற போது, பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் உடற்கல்வி ஆசிரியர் தமிழ்செல்வனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஆசிரியர் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்த மெட்ராஸ் உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு, விளையாட்டிற்காக வெளியில் செல்லும் மாணவிகளை பாதுகாக்க வேண்டியது அவசியம் என கருத்து தெரிவித்துள்ளது. பாலியல் ரீதியாக அத்துமீறும் நபர்களுக்கு உடனடி தண்டனை கிடைக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் எனவும், இதுதொடர்பான அறிக்கையை அடுத்த ஆண்டு பிப்ரவரி 2ம் வாரத்தில் தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்