``தடை விதிக்க முடியாது..'' நீதிமன்றம் திட்டவட்டம் | High Court

Update: 2024-08-28 14:15 GMT

கடையநல்லூர் நகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு இடைக்கால தடை விதிக்க உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ராமகிருஷ்ணன், திவான் மைதீன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது நகர் மன்ற கூட்டதில் நிறைவேற்றபட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என கூறிய நீதிபதி, மனுதாரர்கள் நகராட்சி இயக்குநரிடம் மனு அளித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்