5 ஸ்டார் ஹோட்டலா.? ஆசிரமமா.? - 121 பேரின் உயிரை பறித்த சாமியாரின் சொத்து மதிப்பு இவ்வளவா.?

Update: 2024-07-05 16:24 GMT

உத்தரப்பிரதேசத்தில், சாமியார் போலே பாபா தொடர்ந்து தலைமறைவாக உள்ள நிலையில், அவரது சொத்து மதிப்பு 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ஹாத்ரஸ் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 121 பேர் உயிரிழந்த நிலையில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர். முதல் தகவல் அறிக்கையில் சாமியார் பெயர் இடம்பெறாத நிலையில், அவர் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. 13 ஏக்கரில், சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பில், ஐந்து நட்சத்திர ஹோட்டல் போன்று சொகுசு ஆசிரமத்தை கட்டியதும் தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்