ரூ.200க்கு ஆசைப்பட்டதால் ரூ.11 லட்சம் கருகிய சோகம் - கனவிலும் நினைக்காத அதிர்ச்சி

Update: 2024-10-04 04:57 GMT

கும்மிடிப்பூண்டி அருகே 200 ரூபாய் கடனை திருப்பி கேட்டதால், ஆத்திரத்தில் மளிகை கடையை தீ வைத்து எரித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பூவலம்பேடு பஜாரில் மளிகைக்கடை நடத்தி வரும் சீனிவாசன், தீனா என்ற இளைஞரிடம் பழைய பாக்கி 200 ரூபாயை கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். இந்நிலையில், சீனிவாசனின் மளிகைக்கடை நள்ளிரவில் தீப்பற்றி எரிந்ததில், ரொக்கப்பணம் உள்பட 11 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகின. சீனிவாசனின் புகாரின் பேரில், கடைக்கு தீ வைத்த தீனாவை போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்