அடிக்கடி விபத்து.. சரியில்லாத ரோடு.. - காவலர் செய்த ஒரே செயல்.. குவியும் பாராட்டு

Update: 2023-08-18 16:11 GMT

சாலையின் நடுவே இருந்த பள்ளத்தை களத்தில் இறங்கி சீரமைத்த காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கோவை அன்னூர் கைகாட்டி பகுதி அருகே சாலையின் நடுவே இருந்த பள்ளத்தால் பல்வேறு விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இன்று அதிகாலை போக்குவரத்து குறைவாக இருந்த நேரத்தில் நெடுஞ்சாலை போக்குவரத்து தலைமை காவலர் ஜேம்ஸ், பள்ளத்தினை கான்கிரீட் கலவை கொண்டு நிரப்பி சீர் செய்யும் பணியில் ஈடுபட்டார். காவலரின் இச்செயலை கண்டு அப்பகுதி பொதுமக்கள் வெகுவாகவே பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்