"இந்தியன் என கூறி மொட்டை அடிச்சாங்க" வேதனையில் புலம்பும் தமிழக மீனவர்கள் | Fisherman

Update: 2024-09-14 14:44 GMT

விடுதலை செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை அரசு மொட்டை அடித்து தாயகம் அனுப்பி வைத்ததைக் கண்டு ஆத்திரமடைந்து மீனவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்... இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 8 ராமேஸ்வரம் மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்... 5 மீனவர்கள் மட்டும் விடுதலை செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு மொட்டை அடித்து தாயகம் அனுப்பி வைத்ததால் ஆத்திரமடைந்த மீனவர்கள் இலங்கை அரசை கண்டிக்கும் விதத்தில் தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்