வலையில் சிக்கிய விலையுயர்ந்த மீன்கள்.. அதிர்ஷ்டக்காரரான விவசாயி

Update: 2024-08-10 10:36 GMT

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில், வைகை ஆற்றில், தொடர் மழை காரணமாக அதிகளவில் நீர் செல்கிறது. இந்நிலையில் மேலக்கால் வைகை ஆற்றுப்பகுதியில் கருப்பையா என்ற விவசாயி, விரித்த வலையில் 11 கிலோ எடை கொண்ட ராட்சத கட்லா மீன் மற்றும் விலை உயர்ந்த விரால் மீன் என பல வகை மீன்கள் சிக்கின. ராட்சத கட்லா மீன் அதே இடத்திலேயே ஆயிரத்து 500 ரூபாய்க்கு விலை போனது, மேலும் ஒரு கிலோ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் விரால் மீனும் அதிக அளவில் கிடைத்ததால், விவசாயி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்