டாக்டர் வேலை பார்க்கும் தூய்மை பணியாளர்கள்.. கேள்விக்குறியாகும் நோயாளிகள் உயிர்.. பகீர் வீடியோ

Update: 2024-07-01 15:32 GMT

ஈரோடு அரசு தலைமை மருத்துவனையில் தூய்மை பணியாளராக வேலை செய்யும் நபரே, நோயாளிக்கு சிகிச்சை செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்லும் நிலையில், போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாததால் நோயாளிகள் உரிய சிகிச்சை பெற முடியாமல் சிரமப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராக பணியாற்றும் ஒருவரே, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது போன்ற வீடியோ வெளியாகி இருப்பது, பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், நோயாளிக்கு தூய்மைப் பணியாளர் சிகிச்சை தரும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்