அதிமுக EX கவுன்சிலர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை... மர்ம கும்பல் வெறிச்செயல் - பெரும் பதற்றம்

Update: 2024-06-30 05:32 GMT

அதிமுக EX கவுன்சிலர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை... மர்ம கும்பல் வெறிச்செயல் - பெரும் பதற்றம்

கடலூரில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் பகுதியை சேர்ந்தவர் புஷ்பநாதன். அதிமுக மாவட்ட பிரதிநிதியாக இருக்கும் புஷ்பநாதன், அப்பகுதி மக்களிடையே செல்வாக்கு மிக்க நபராக வலம்வந்தவர். இந்த நிலையில், பணி நிமித்த வெளியில் சென்றிருந்த புஷ்பநாதன், மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மூன்று மர்மநபர்கள் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில், புஷ்பநாதனை ஓடஓட வெட்டி படுகொலை செய்தனர். சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புஷ்பநாதனின், கொலைப்பின்னணி இதுவரை வெளியாகத நிலையில், அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில், அதிமுக பிரமுகரின் கொலை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்