மதம் குறித்து சர்ச்சை பேச்சு..! பாதிரியாா் வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Update: 2024-07-04 17:23 GMT

கோவையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில், பாதிரியார் மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டுள்ளார். கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள சி.எஸ்.ஐ. இமானுவேல் தேவாலயத்தின் பாதிரியாராக இருப்பவர் பிரின்ஸ் கால்வின். இவர், கடந்த மாதம் 16ஆம் தேதி தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்ச்சியின் போது பேசிய சர்ச்சை கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தின.

பாதிரியார் பிரின்ஸ் கால்வின் பேசிய இந்த கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், இந்து மற்றும் கிறிஸ்துவ சமூகங்களிடையே பகைமையை ஊக்குவிக்கும் விதமாக பேசுதல், சாதி, மத, இனங்களிடையே விரோத உணர்ச்சியை தூண்டுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் ரேஸ் கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், இந்து மக்களின் உள்ளத்தை புண்படுத்தும் நோக்கில் தான் பேசவில்லை என்றும், தனது பேச்சால் காயம் பட்ட அனைவரிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் கூறி, பாதிரியார் பிரின்ஸ் கால்வின் வீடியோ வெளியிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்