"முதல்வர் வெளிநாட்டு பயணத்திற்கு பதிலாக.." - தமிழிசை சொன்ன கருத்து

Update: 2024-09-21 06:33 GMT

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாண்டிச்சேரி முன்னாள் ஆளுநராக இருந்த பாஜகவை சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். 3 கிராமங்களில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. கேர்பட்டா படுகர் இன மக்கள் வசிக்கும் கிராமத்திற்கு சென்ற தமிழிசை சௌந்தரராஜன், படுக மக்களின் உடைகளை அணிந்து கொண்டு, அங்கிருந்த மூதாட்டிகளிடம் உரையாற்றினார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக முதல்வர் வெளிநாட்டுக்கு சென்றதை விட நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்றிருந்தால், இன்னும் அதிகமாக தமிழ்நாட்டிற்கு பலன் கிடைத்திருக்கும் என குறிப்பிட்டார்

Tags:    

மேலும் செய்திகள்