பல மாநிலங்களை திக்குமுக்காட வைத்து -பரிசை தட்டி தூக்கிய சென்னை

Update: 2024-09-26 03:19 GMT

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே ரத்தினமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் சிபிஎஸ்சி க்ளஸ்டர் பள்ளிகளுக்கு இடையேயான தேசிய அளவில் கோ கோ போட்டி நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, அந்தமான், ஆந்திரா என பல்வேறு மாநிலங்களில் இருந்து 800 பள்ளிகளை சார்ந்த 10 ஆயிரம் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். 14,17,19 வயது என மூன்று பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன. இதில் சென்னையை சேர்ந்த தனியார் பள்ளிகள் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு

பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்