மெரினாவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஊதியத்தை நிதி உதவியாக வழங்கிய MLA

Update: 2024-10-08 16:04 GMT

சென்னையில் விமான சாகசத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, எம்.எல்.ஏக்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை நிதி உதவியாக வழங்கினர்.

திருவெற்றியூர் ஆர்.எம்.வி நகரை சேர்ந்த கார்த்திகேயன், விமான சாகசத்தை பார்வையிட சென்ற போது மயக்கமடைந்து உயிரிழந்தார். இவரது குடும்பத்திற்கு திருவொற்றியூர் எம்.எல்.ஏ., கே.பி.சங்கர், தனது ஒரு மாத சம்பளத்தை நிதி உதவியாக வழங்கினார். இதேபோன்று, கொருக்குப்பேட்டையை சேர்ந்த ஜான் என்பவரும் விமான சாகசத்தை காண சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது குடும்பத்துக்கு, ஆர்.கே. நகர் எம்.எல்.ஏ. ஜேஜே எபினேசர் தனது ஒரு மாத சம்பளத்தை நிதி உதவியாக வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்