கோயம்பேட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - "எங்க நிலைமை யாருக்கும் வரக்கூடாது"

Update: 2024-10-12 13:57 GMT
  • சென்னை மதுரவாயலை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் மேஸ்திரி வேலை செய்து வந்தார். ஆயுத பூஜை நாளான நேற்று ஒரு இருசக்கர வாகனத்தில் அண்ணா நகரில் உள்ள தனது அலுவலகத்துக்கு சென்று பூஜை போட்டுவிட்டு மறுபடியும் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வந்தபோது பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவரது இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் தலை நசுங்கி பலியானார். நான்கு மகள்களுக்கு தந்தையான கிருஷ்ணமூர்த்தியின் இழப்பை தாங்க முடியவில்லை என அவரது உறவினர் வேதனையுடன் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்