காவல்துறைக்கு கெடு.. வழக்கறிஞர் மீது கிரிமினல் வழக்கு.. ஐகோர்ட் அதிரடி

Update: 2024-08-29 11:19 GMT

போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்ற வீட்டை 48 மணி நேரத்திற்குள் மீட்டு, வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நந்தனத்தை சேர்ந்த மாதவன் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். ஒப்பந்த காலம் முடிவடைந்த பிறகும், வாடகை ஏதும் கொடுக்காமல் மாதவனின் வீட்டை வழக்கறிஞர் அமர்நாத் அபகரித்து வைத்திருந்தது விசாரணையில் உறுதியானது. அதேபோல் வழக்கறிஞர் அமர்நாத் தாக்கல் செய்த ஆவணங்கள் போலியானது என தடயவியல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதிகள், 48 மணி நேரத்திற்குள் அபகரிக்கப்பட்ட வீட்டை மீட்பதோடு, வழக்கறிஞர் அமர்நாத் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்