இரவு நேரங்களில் மின்வெட்டு... அலட்சியம் காட்டும் மின்வாரிய ஊழியர்கள் - போர்க்கொடி தூக்கிய பொதுமக்கள்

Update: 2024-09-21 10:53 GMT

சென்னை மேடவாக்கம் மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள், முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேடவாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதாக குற்றம்சாட்டிய அவர்கள், பிரச்சினையை சொல்ல தொலைபேசியில் அழைத்தாலும், மின்வாரிய அலுவலக ஊழியர்கள் பதிலளிக்காமல் அலட்சியப்படுவதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த மேடவாக்கம் போலீசார், சமரசம் செய்து பொதுமக்களை அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்