இன்னும் 10 நாளில் சென்னைக்கு வரும் அடுத்த மழை - இது முடிவு இல்ல.. ஆரம்பம் தான்

Update: 2024-10-26 13:51 GMT

சென்னையில் எப்படிப்பட்ட பெருமழை வந்தாலும், மக்களை காக்க தயாராக இருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரியில் தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள், மாநகராட்சி பணியாளர்கள் ஆயிரத்து 280 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் உதயநிதி, தூய்மை பணியாளர்கள் இருக்கும் நம்பிக்கையில்தான், மழை வந்தால் மிகப்பெரிய பாதிப்பு இருக்காது என்று கூறியதாக தெரிவித்தார். கடந்த வாரம் மழை பெய்தபோது, 12 மணி நேரத்தில், மழை பெய்த சுவடே தெரியாத அளவிற்கு தூய்மை பணியாளர்கள் பணியாற்றியதாக பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்