திருட வந்த இடத்தில் திருடன் கொடூர மரணம்.. அதிர்ச்சியூட்டும் சிசிடிவி

Update: 2024-10-09 04:44 GMT

அருப்புக்கோட்டையில், திருடச் சென்ற இடத்தில் தவறி விழுந்து திருடன் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அருப்புக்கோட்டை எம்.டி.ஆர் நகர் கிழக்கு தெரு பகுதியில் செயல்பட்டு வரும் கெமிக்கல் நிறுவனத்தில், அடையாளம் தெரியாத நபர் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து உரிமையாளர் அளித்த தகவலின்பேரில் வந்த போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், திருட வந்த இடத்தில் தென்காசியை சேர்ந்த முத்து மாரியப்பன் என்பவர் தவறி விழுந்து உயிரிழந்ததை கண்டறிந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்