சிறையில் இருக்கும் பிரபல யூடியூபர் பிரியாணி மேனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

Update: 2024-08-08 04:45 GMT

பிரபல யூடியூபர் பிரியாணி மேன் என்ற அபிஷேக் ரபியை மேலும் ஒரு வழக்கில் சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

யூடியூபில் பிரியாணி மேன் என்ற சேனலை வைத்துள்ள அபிஷேக் ரபி, இர்பான் உட்பட ஏராளமான யூடியூபர்களை தரக்குறைவாக விமர்சித்தது இணையத்தில் சர்ச்சையானது. மேலும், யூடியூப் நேரலையில் தற்கொலை முயற்சி செய்வது போன்றும், செம்மொழி பூங்கா நற்பெயரை கெடுக்கும் வகையில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டதாகவும் அண்மையில் அபிஷேக் ரபி கைது செய்யப்பட்டார். கடந்த மூன்றாம் தேதி நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிறிஸ்தவ மதத்தை இழிவுபடுத்தும் வகையில் நடித்து வீடியோ வெளியிட்டதாக மற்றுமொரு வழக்கில் அபிஷேக் ரபியை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்