காதலியுடன் கைகோர்த்து, வீதியில் நோட்டம்? - சிசிடிவியில் சிக்கிய `ஜோடி புறா' | Bike Theft | CCTV

Update: 2024-09-25 02:46 GMT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், காதல் ஜோடி பைக் திருட்டில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. ஆர்.சி. தெருவில் வசித்து வருபவர் பாலமுருகன். இவர் தனது பைக்கை வீட்டின் முன் நிறுத்தியிருந்த நிலையில், பைக் திருடப்பட்டிருக்கிறது. சிசிடிவியில் அடையாளம் தெரியாத இளைஞர், பெண் ஒருவரின் உதவியுடன் பைக்கை திருடிச் சென்றது பதிவாகியுள்ள நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பெண், இளைஞரின் காதலி என கூறப்படும் நிலையில், இருவரும் கைகோர்த்து வீதிகளை நோட்டமிட்டும், பின் பைக்கை திருடி செல்வது போலவுமான சிசிடிவி வெளியாகி பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்