சின்ன மழையால் வந்த பெரிய ஆபத்து.. விவசாயிகள் அதிர்ச்சி

Update: 2024-10-03 12:31 GMT

சின்ன மழையால் வந்த பெரிய ஆபத்து.. விவசாயிகள் அதிர்ச்சி

#manamadurai #farmer #rain

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஒப்பந்தக்காரர், பெயருக்கு வேலை பார்த்து முடித்த நிலையில், சிறுமழைக்கு கூட தாங்க முடியாமல், கண்மாய் கரைகள், கரைந்து போய்விட்டதாக, விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

செய்களத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது சுமார் 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்மாய். இங்கிருந்து சுமார் 27 கிராமங்களுக்கு தண்ணீர் செல்கிறது. இந்த கண்மாய் கரைகளை சீரமைக்க தமிழக அரசு, ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி பணிகள்நடைபெற்று வருகின்றன. முறையாக மணல்களை அள்ளி போட்டு இயந்திரங்கள் வைத்து பலப்படுத்தாதமால் அரைகுறையாக வேலை பார்த்ததால், கடந்த சில‌நாட்களாக பெய்த சின்ன மழைக்கே, கரைகள் கரைந்து விட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்