தனக்கு பிறந்த அழகான ஆண் குழந்தை... அடுத்த நொடியே கழுத்தை அறுத்த கொடூர தாய் - காரணம்தான் பேரதிர்ச்சி

Update: 2024-10-24 04:48 GMT

தனக்கு பிறந்த அழகான ஆண் குழந்தை... அடுத்த நொடியே கழுத்தை அறுத்த கொடூர தாய் - காரணம்தான் பேரதிர்ச்சி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பிறந்த சில மணி நேரத்தில் தனது ஆண் குழந்தையின் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற இளம் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுக்காம்பட்டி சாலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் குழந்தை கத்தும் சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் சென்று பார்த்த பொழுது அக்குழந்தை கழுத்து, கை அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தது...

குழந்தையை மீட்ட மரியம் பீவி என்பவர் மருத்துவமனையில் அனுமதித்தார்...

இது சம்பந்தமாக போலீசார் தீவிர விசாரணை செய்து அதே பகுதியைச் சேர்ந்த குழந்தையின் தாயான 18 வயது இளம்பெண்ணைக் கைது செய்தனர்...

அவர் வீட்டருகே வசிக்கும் திருமணமான கொத்தனார் மகேந்திரன் வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதனால் தான் கர்ப்பமுற்றதாகவும் வெளியில் தெரிந்தால் அவமானம் என்று கருதி பெற்ற குழந்தையை கழுத்தை அறுத்து வீசி சென்றதாக அவர் தெரிவித்துள்ளார்...

கொத்தனார் மகேந்திரனை போலீசார் போக்சோ வழக்கின் கீழ் கைது செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்