ஆவின் நிலையத்தில் திடீர் அமோனியா கசிவு...காற்றில் பரவிய நொடி மூச்சுத்திணறிய மக்கள்

Update: 2024-10-19 05:43 GMT

ஆவின் நிலையத்தில் திடீர் அமோனியா கசிவு...காற்றில் பரவிய நொடி மூச்சுத்திணறிய மக்கள்

ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் திடீரென அமோனியா வாயு கசிவால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பு அருகே ஆவின் பால் குளிரூட்டு நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி 10 ஆயிரம் லிட்டர் அளவிலான பால் பதப்படுத்தி அனுப்பப்படும் நிலையில், வழக்கம்போல் பால் குளிரூட்டும் பணியில் 7க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். திடீரென பாலை குளிரூட்டுவதற்காக செல்லும் குழாயில் பழுது ஏற்பட்டது. இதனால் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு, சுற்று வட்டார பகுதியில் வசிக்கும் மக்களுக்கு லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், கவச உடையை அணிந்து சென்று அமோனியா வாயு செல்லும் குழாயில் ஏற்பட்ட பழுதை சரி செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்