ஆம்ஸ்ட்ராங் வழக்கு - வெளியான புதிய தகவல்

Update: 2024-07-27 02:01 GMT

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் 50 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ம் தேதி கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி புன்னை பாலு

உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டனர் இதில் 5 பேர் வழக்கறிஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டதிருவேங்கடம் என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.திருவேங்கடத்துடன் அடிக்கடி தொடர்பிலிருந்த ஆற்காடு சுரேஷின் உறவினர் பிரதீப் என்பவரை போலீசார் கைது செய்து இருக்கிறனர். ஏற்கனவே 17 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 18வது நபராக பிரதீப் கைது செய்யப்பட்டு இருக்கிறார். மேலும் இந்த வழக்கில் பின்புலமாக செயல்பட்ட பிரபல ரவுடி சம்போ செந்திலையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 50 பேரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி இருக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்