ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. அனைத்து வழக்கறிஞர்களுக்கும் புதிய சிக்கல்

Update: 2024-07-24 17:09 GMT

ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் அடுத்தடுத்து வழக்கறிஞர்கள் கைது செய்யப்படுவதை அடுத்து, வழக்கறிஞர் தொழில் நடைமுறை சட்டத்தை கடுமையாக அமல்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.

அவர் அளித்துள்ள மனுவில், பல வழக்குகளில் வழக்கறிஞர்கள் குற்றவாளியாகவும் சேர்க்கப்படுவது அதிகரித்து வருவதாகவும், இது வழக்கறிஞர் தொழிலுக்கு அவமானத்தையும், பொதுமக்களுக்கு வழக்கறிஞர் தொழில் மீதான நம்பக தன்மையையும் இழக்கும் நிலையையும் உருவாக்கியுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. அதனால் வழக்கறிஞர் தொழில் நடைமுறை சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்