சாலையோரத்தில் கட்டுகட்டாக கிடந்த ஆதார் அட்டைகள் - பார்த்ததும் பெண் செய்த செயல்

Update: 2024-05-01 16:06 GMT

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சாலையோரத்தில் கட்டுகட்டாக கிடந்த ஆதார் மற்றும் தபால் அட்டைகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பூவாளூர் சவேரியார் தெருவில் உள்ள ஒரு வீட்டின் அருகே ஏராளமான ஆதார் அட்டைகள், தபால் அட்டைகள் கட்டுகட்டாக கீழே கிடந்ததை பார்த்த எலிசபெத் என்ற பெண் அவற்றை தபால் அலுவலகத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து தபால் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்