சாகித்ய அகாடமி விருது பெற்றார் - தமிழ் எழுத்தாளர் அம்பை

2021 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது தமிழ் சிறுகதை எழுத்தாளர் அம்பைக்கு வழங்கப்பட்டது.

Update: 2022-03-12 04:03 GMT
2021 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது தமிழ் சிறுகதை எழுத்தாளர் அம்பைக்கு வழங்கப்பட்டது. 24 மொழிகளில் விருது அறிவிக்கப்பட்ட எழுத்தாளர்களுக்கு சாஹித்ய அகாடமி விருது வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இதில், 'சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை' என்ற சிறுகதை எழுதிய அம்பைக்கு, 2021ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகடமி விருது வழங்கப்பட்டது. அவருக்கு அகாடமியின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் விருதை வழங்கி, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினர். சி.எஸ்.லட்சுமி எனும் இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் அம்பை, தமிழ் நவீன இலக்கியத்தில் மிக முக்கியமான எழுத்தாளராவார். 'வீட்டின் மூலையில் ஒரு சமையலறை', 'சக்கர நாற்காலி', 'பயன்படாத பாதைகள்' உள்ளிட்ட பல்வேறு சிறுகதைத் தொகுப்புகளை அவர் எழுதியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்