திருவண்ணாமலையில் பாஜக பிரமுகரின் கார் நள்ளிரவில் எரிப்பு

வந்தவாசி அருகே, பாஜக பிரமுகரின் காரை, மர்மநபர்கள் நள்ளிரவில் தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2019-12-19 07:46 GMT
சாய்பாபா என்பவர் பாஜகவில், பொருளதார பிரிவில், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தலைவர் பொறுப்பில் உள்ளார். நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு இவரும், இவருடைய மனைவி புவனேஸ்வரியும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவருக்கு கடந்த 8ஆம் தேதி, பாஜகவில் இருந்தால் கொலை செய்து விடுவதாக செல்போனில் மிரட்டல் வந்ததை அடுத்து, அது குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு அவரது 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார் மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்