தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த இரண்டு தினங்களுக்கு பின்னர் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு ஏற்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2019-07-08 11:36 GMT
அடுத்த இரண்டு தினங்களுக்கு பின்னர் தமிழகத்தில் மழைக்கான  வாய்ப்பு ஏற்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு பருவமழை தாக்கம் காரணமாக கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் , விருதுநகர் மற்றும் நெல்லை மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கூடலூரில் 5செ.மீ மழை பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்