11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - 72 வயது முன்னாள் ராணுவ வீரர் கைது

ஆரணி அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 72 வயது முன்னாள் ராணுவ வீரர் போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-04-29 12:09 GMT
கண்ணமங்கலம் அடுத்த அர்ஜுணபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பாலகிருஷ்ணன்.  இவர் அதே கிராமத்தை  சேர்ந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது இதுகுறித்து ஆரணி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் பாலகிருஷ்ணன் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது. இதனைத் தொடர்ந்து, ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பாலகிருஷ்ணனை போஸ்கோ சட்டத்தில் போலீசார்  கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்