4 தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு - வேல்முருகன் தகவல்

நான்கு தொகுதி இடைத் தேர்தலில், தி.மு.வு.க்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு அளிப்பதை தெரிவித்ததாக தெரிவித்தார்.

Update: 2019-04-25 11:21 GMT
இடைத் தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்று ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார் என்று தெரிவித்த வேல்முருகன், தி.மு.க. வெற்றிக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என கூறினார்.பொன்பரப்பி சம்பவத்தில் குற்றத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், மத்திய அரசு நிறுவனங்களில் தொடர்ந்து தமிழர்களுக்கான வேலை வாய்ப்பு புறக்கணிப்பட்டு வருவதாகவும் வேல்முருகன் குற்றம் சாட்டினார்.

ஸ்டாலினுடன் ராஜ கண்ணப்பன் சந்திப்பு 



தேர்தல் முடிவுக்கு பிறகு, தி.மு.க-வில் இணைவது பற்றி ஆதரவாளர்களுடன் கலந்து பேசி முடிவெடுப்போம் என முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலினை சந்தித்த பிறகு பேசிய அவர், தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருப்பதாக குறிப்பிட்டார். 4 தொகுதி இடை தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும், இந்த தொகுதிகளில் அ.தி.மு.க-வின் தோல்வி உறுதி என்றும் ராஜ கண்ணப்பன் கூறினார். 



Tags:    

மேலும் செய்திகள்