தேர்தல் பறக்கும் படை சோதனை எதிரொலி : நாட்டிலேயே தமிழகத்தில் அதிக பணம் பறிமுதல்

இதுவரை, தமிழகத்தில் 80 கோடி ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Update: 2019-04-03 07:55 GMT
மதுரையில் இன்று 47 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதுரையை சுற்றி 22 நாளில் 60 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டது. இதுவரை 35 கோடி மதிப்பிலான நகைகள், பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று மட்டும் தேர்தல் பறக்கும் படையினரால் சுமார் 2.23 கோடி பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது. இதுவரை மொத்தமாக  80.35 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுவரை ரூ.132 கோடி மதிப்பிலான 468 கிலோ தங்கமும், ரூ. 1.70 கோடி மதிப்பிலான 414 கிலோ வெள்ளியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்