விறுவிறுப்படையும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. வித்தியாசமாக நடந்த வேட்பு மனு தாக்கல் | Thanthitv

Update: 2024-06-14 16:14 GMT

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு அடுத்த மாதம் 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி சந்திரசேகரிடம், சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் அக்னி ஆழ்வார், பத்தாயிரம் ரூபாய்க்கு சில்லறை காசுகளை கொடுத்து தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். சேலத்தைச் சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன் 242வது முறையாகவும், கோவையைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் நூர் முகமது 44வது முறையாகவும் தேர்தலையொட்டி தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்