"பிரதமர் மோடி கவனித்து வருகிறார்" - மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு

Update: 2024-06-28 13:42 GMT

டெல்லி மழை பாதிப்பை பிரதமர் மோடி உன்னிப்பாக கண்காணித்து வருவதாக, விமான போக்குவரத்துறை அமைச்சகர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்ததாகவும், பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நிபுணர்கள் முனையத்தின் கட்டமைப்பை ஆய்வு செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரதமர் மோடி நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு தருவதாக உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்