தமிழ்நாடு அரசுக்கு வைகோ வைத்த முக்கிய கோரிக்கை | Vaiko | Thanthitv

Update: 2024-10-05 12:06 GMT

சாம்சங் இந்தியா நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல் வழங்கி, கோரிக்கைகள் மீது பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டுமென ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். காஞ்சிபுரத்தில் உள்ள சாம்சங் இந்தியா நிறுவனத்தில், சி.ஐ.டி.யு சார்பில் சங்கம் ஒன்றைத் தொடங்குவதற்கு தொழிலாளர்கள் முடிவு செய்த நிலையில், சாம்சங் இந்தியா நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை என தெரிவித்துள்ளார். தொழிலாளர்களின் முக்கியக் கோரிக்கையான, சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை, தமிழ்நாடு தொழிலாளர் துறை உடனடியாக பதிவு செய்து சான்றிதழ் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்